எங்கேயோ ஒரு குரல்

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
உன் முன் இருப்பது என்னமோ உன் பிம்பம் தான்
சுக்கு நூறாய் நீ உடைத்தாலும்
உடைவது என்னமோ உன் நிழல்கள் தான் !

உனக்குள் நீ எவ்வளவு கத்தினாலும்
உன் இதயம் என்னும் ஒலி கவச அறையை விட்டு
அது வெளியேற போவது இலலை !

கனவில் நீ வடித்து வைத்த பாத்திரங்கள் எதுவும்
உன் நினைவில் வசனங்களை ஒப்புவிக்க போவதும் இல்லை !

உலக நாடக மேடையில் அரங்கேற்ற துடிக்கும் உன் நிஜம் !!

1 comment:

tamizh said...

chance illa sona.. sema write up.. i lov this kavidhai so much!!!!!!