"கூளச்சி""

மனதில் ஊனம் வைத்த சிலர்
நாவில் விஷம் வைத்து
என்னை சீருகயிலும்
சூரியனிடம் குலைக்கும்
நாயை நினைத்து
சிரித்திருந்தேன் நான்

என் மனதில் வைத்த சிலர்
வேடிக்கையின் வாடிக்கையில்
என்னை " கூளச்சி "
என்று சீண்டுகையில்
ஏனோ நான் வெளியே சிரித்தாலும்
செல்லமாய் அடிப்பதாய் நடித்தாலும்
இயற்கையின் ஓரவஞ்சனையை எண்ணி
உடைந்துபோகிறது
என் மனம் மட்டும் அல்ல நம்பிக்கையும் !!

எழுதா கதை !

சொல்லாத காதலை சொல்ல துடிக்கும் காதலி
காதலனிடம் சொல்ல போகிறாள் !

சொல்லிவிட்டேன் உன் காதலை அந்த பெண்ணிடம்
நம்பிக்கையோடு காத்திரு என்று !!