இடை வெளி துளிகள்

சண்டைகளில் தேடிய இடை வெளி
அருகில் தொலைத்த என் சந்தோசங்கள்
தூரத்தில் கிடைக்கும் என்று நினைத்த அமைதி
எல்லாம் கிடைத்தது !
தூரத்தின் அமைதியில் .. தொலைந்து போன நம் அன்பு
கட்டி வைத்து காத்திருக்கிறேன் ,
மறுபடியும் உன்னோடு போர் நடத்த.. !!

இடை வெளியை உம் ரசிக்கிறேன் இன்று
நம்முள் வலியை உணர்த்தியதால்



சண்டைகள் கூட அருகில் இருந்தால் தான் இனிக்கும்
சுகங்கள் கூட தூரத்தில் இருந்தால் கசககும்


நினைவுகள் கூட
இத்தனை சுகம் தரும்
என்று கண்டதில்லை நான்
பிரிவிலும் அருகில் சேர்க்கும்
இந்த நினைவுகளை ச்பரிசுக்கும் வரை !!

6 comments:

tamizh said...

adengappa!! romba hi fi ya iruku un kavidhai...

தேன்மொழி said...

hi ya irukka ? .. actual a athu kavithai ey illa.. i wrote the lines assuch what ever came to mind avlo thaan :-))

saisaravanakumar said...

an unblemished thoughts..........

தினேஷ் said...

நினைவுகளின் நிழல் கவிதையாய்...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

Divya said...

ரொம்ப நல்லாயிருக்குதுங்க தேன்மொழி!! பாராட்டுக்கள்!!

நிலாரசிகன் said...

// ச்பரிசுக்கும்//

இதென்ன?