காதல் மொழி அறிவாயோ !!

நீ திட்டும் போதெல்லாம்

காது இருப்பதையே மறந்திருப்பேன்

கையிலடக்க நினைத்தபோதெல்லாம்

சிறகடிக்க நினைத்திருக்கிறேன்

ஒருவரில் ஒருவர் வேண்டினோம் மாற்றம்

இறுதியில் இருவருக்குமே ஏமாற்றம்

கை கோர்த்து சென்றிக்கிறோம்

முகம் சுளித்து திரும்பி இருக்கிறோம்

ஆணாதிக்க சண்முகம் நீ என்றேன்

வீண் வாதங்கள் வேண்டாம் என்றாய்

நீ ஏதுமறியாதவன் என நானிருந்தேன்

என்னைமட்டுமே அறிந்தவனாய் நீயிருந்தாய்

பிள்ளை மட்டுமே என்

 வாழ்வின் இனிமை என்றிருந்தேன்

உன்னுடைய தொலைவில் தான்

 வாழ்வின் வெறுமை உணர்ந்தேன்

பெற்றவர் செய்துவைத்த திருமணத்தில்

காதல் இருப்பதில்லை என்றிருந்தேன்

நீ இல்லாத தனிமையில் தான்

நாம் பேசிய காதல் மொழி

இதுவென்று உணர்ந்தேன் நான் !