ஆராரோ ஆரிரரோ பாடட்டுமா !

எனக்குள் வந்த மாற்றமே
அழகான இடை ஏற்றமே
என்னை நானே ரசிக்கின்றேன்
என்னுள் நீ வசிப்பதினால்

என்னில் கனவுகள் தருகிறாய்
இயற்கையான அதிசயமாய் விரிகிறாய்
ரணங்களெல்லாம் மறந்து போக
பூரண நிவாரணியாய் வருகிறாய்

பார்க்காமலே காதல் புரிதலில்
காதல் உணர்தலில் காதல்
எல்லா வகையிலும் உன்னை
காதலிக்க வைத்தாய் நீ

தண்ணீர் குடத்தில் ஜனிக்கும்
முத்தே என் முழுமதியே
கண்ணீர் துடைக்க வந்த
கண்ணே என் களஞ்சியமே

என் வாழ்வின் வசந்தமே
என்னை வருடிச்செல்லும் தென்றலே
உன் அசைவிலே அசரவைக்கிறாய்
உதைத்தே உற்சாகம் ஊட்டுகிறாய்

நான்கு கண்கள் காணும்
ஒற்றை கனவு நீ
இரண்டு உயிர்கள் சுமக்கும்
ஒற்றை ஜீவன் நீ

உன்னை ஏந்தும் நொடிக்காக
கையேந்தி காத்திருக்கிறேன் நான்
உனக்கு புகட்ட வேண்டியே
அன்பு சுரந்து வீற்றிருக்கிறேன்

நினைத்ததை முடிக்கும் விநயனா
நினைத்ததும் சிலிர்க்கும் தென்றலா
புதிரின் முடிச்சு அவிலட்டும்
புன்னகை பூ மலரட்டும்