அம்மா இங்கே ஓடி வா !!!

அன்புள்ள அம்மாவுக்கு ,

இன்றும் பள்ளிகுச்செல்லுகையில் அடம் பிடிக்கவில்லை

மதிய உணவை மீதமின்றி உண்டேன்

பள்ளி பாடத்தை முழுமையாக எழுதிக்கொண்டேன்

விளையாட்டுப்போட்டியில் நான் முதலாக வந்தேன்

பள்ளிச்சட்டையில் கரையேதும் செய்ய வில்லை

சமத்தாக வீட்டுப்பாடம் முடித்து விட்டேன்

இன்றும் நீர்த்திரையில் தான் கண்மூடினேன்

அழகான கனவில் அன்பான நீ

முத்தம் கொடுத்து நித்திரை கலைக்கிறாய்

உணவோடு பிசைந்து அன்பை ஊட்டுகிறாய்

பள்ளிக்கு நான் செல்ல கை அசைக்கிறாய்

இல்லம் வந்ததும் கதை கேட்கிறாய்

நோயென்று நான்படுக்க நீ துவண்டுபோகிறாய்

இடிக்கு நான் ஒடுங்க அனைத்துக்கொள்கிறாய்

உன் முகம் பார்க்க எத்தனிக்கையில்

கானல் நீராய் நீ பொய்யாகிறாய்

ஏக்கம் சுமந்து நான் நிற்கிறேன்

உன் ஸ்பரிசம் வேண்டி காத்திருக்கிறேன்

என்னை தொலைத்த விலாசம் மறந்தாயோ

கடலில் விழுந்த துளிஎன்னை மீட்டெடுப்பாயோ

நம்பிகைக்காலில் தான் நான் நடக்கின்றேன்

நீ என்னை அள்ளிஎடுக்க துடிக்கின்றேன்

பரிதாபங்கள் என்னை கொல்லும்முன் வந்துவிடு

இவ்வுலகில் எனக்கும்ஓர் முகவரி தந்துவிடு

தூங்காத விழியோடு

என்றும் அன்புடன்

அம்மு

மூன்றாம் வகுப்பு

அன்னை தெரேசா அனாதை இல்லம்