இதயம்

மருத்துவரை சந்தித்து விட்டு வந்த அமுதாவின் கண்கள் குளமாகி போயின .சாலையில் கணவன் கையை கோர்த்துக்கொண்டு நடப்பதையே விரும்பாதவள் , அந்த மருத்துவமனையின் மிகுந்த கூட்டத்தின் நடுவில் , அவள் கணவன் பாஸ்கரனை கட்டிக்கொண்டு அழுதாள் . இத்தனை நெருக்கமும் அன்யோன்யமும் அவர்களுக்குள் வந்தது எப்படி ?
திருமணத்தின் மீது பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை அமுதாவிற்கு , அவளதுவேலையில் இருக்கும் சுவாரசியமும் ,ஈர்ப்பும் ஏனோ அவள் திருமண வாழ்கையில் இருப்பதாக உணர்ந்ததே இல்லை . கடமையாக மட்டுமே நினைத்த அவள் இல்வாழ்க்கையில் காதலுக்கு இடமே இருந்தது இல்லை . அவள் வளர்ந்த சூழலிற்கு முற்றிலும் மாறுபட்ட அவள் புகுந்த வீடு , அங்கு கிடைக்காத சிந்தனை சுதந்திரம் , பிடிக்காதவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் , எல்லா விஷயங்களிலும் பாஸ்கரனுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு , ஆசைகளுக்கெல்லாம் ஏற்பட்ட தடை எல்லாமும் அவள் திருமண வாழ்க்கையில்கசப்பை கூட்டிக்கொண்டே போயின.என்றும் அவள் எண்ணத்தில் இழந்து விட்ட அவள் சுதந்திரத்தின் சோக கீதம் தான் .. இப்படித்தான் மெதுவாய் கடந்தது ஒன்றரை வருடம் .
பாலைவனமான அவள் மனதில் பூத்தது ஒரு சந்தோசப்பூ . அவள் கர்ப்பமானதைஉறுதிப்படுத்திய அந்த நொடி , அவள் மனதுக்குள் புது உற்சாகத்தை தந்தது . பல கோடி மத்தாப்புகள் ஒன்றாய் சிரிப்பது போல் அவள் மகிழ்ந்தாள் . தனக்காகவென்றே ஒரு ஜீவன் அந்த வீட்டுக்குள் வரப்போவதை நினைதுநினைத்து பூரித்து போனாள் .அவள் வீட்டின் வானிலையே மாறிவிட்டது . அவளுக்காகவே அவள் குடும்பம் சுழன்றது . எந்நேரமும் அவளை குற்றவாளி கூண்டில் ஏற்றும் பாஸ்கரன் , அவளுக்காக பரிந்து பேசினான். பழங்களை வாங்கி குவித்தான் . அவன் கண்களிலும் அவள் கனவுகளை கண்டான் . ஒன்றாய் பல திட்டங்களை தீட்டினார்கள் . வேறுபாடில்லாத கருத்துகளை பரிமாறிக்கொண்டனர் .இல்லற வாழ்வின் சாராம்சத்தை உணர்ந்தாள் . அலுவலகத்தை விட வீடு அவளை ஈர்க்கத்தொடங்கியது . வீட்டிலேயே அதிக நேரம் களித்து மகிழ்ந்தாள் . அவள் இல்லறத்திலும் இத்தனை இன்பங்களா என்று சிலிர்த்தாள் . ஆனால் நிலைக்கவில்லை அவள் நினைப்பு .
சில நாட்களாய் தனக்கு ஏற்படும் உபாதையை பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க சென்றாள். ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர் சொன்ன பதில் அவளுக்குள் இடியாக இறங்கியது . கருவின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவும் , கருவிற்கு இதயம்உருவாகவே இல்லை என்றும் , இதய துடிப்பில்லாத அந்த கருவை கலைத்து விடுவது தான் அமுதாவிற்கு நல்லது என்று சொன்னார். கருவை கலைப்பது தான்அவளுக்கு நல்லதா ? அவள் வாழ்க்கையின் கருவையே அவளுக்கு உணர்த்திய அவள கண்மணியை கலைக்க வேண்டுமா ?? ஆயிரம் கேள்விகள் மின்னலாய் பாய்ந்தது .
மருத்துவரை சந்தித்து விட்டு வந்த அமுதாவின் கண்கள் குளமாகி போயின .பல ஆயிரங்கலாய் உடைந்து போனாள் அமுதா . அந்த மருத்துவமனையின் மிகுந்த கூட்டத்தின் நடுவில் பாஸ்கரனை கட்டிக்கொண்டு அழுதாள் . பாஸ்கரன் செய்வதறியாது தவித்தான். வேறு சில மருத்துவர்களிடம் அவளை அழைத்துசென்றான் . சொல்லிவைத்தார் போல் எல்லா மருத்துவர்களும் அதையேசொல்ல, முடிவை எண்ணி முடிவில்லா சோகத்தில் மூழ்கினாள் அமுதா . வானில் பறந்திருந்தவள் அகள பாதாளத்தில் ஒடுங்கியது போல் உணர்ந்தாள் .
அமுதாவின் தாய் வீட்டிற்கு போகவேண்டும் என்றாலே கடிந்து கொள்ளும் பாஸ்கரன், அமுதாவின் மனநிலை உணர்ந்து அவளை அங்கு அழைத்துச்சென்றான் . கருகலைப்பு நடந்து இரண்டு நாட்களுக்கு அவள் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டான் . யாரும் அவள் மனதை காய படுத்திவிட கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தான் . சொந்தங்களின் துக்க விசாரிப்புகள் அவளை நெருங்காது பார்த்துக்கொண்டான் .
இத்தனை இனியவனா அவள் கணவன் என்றெண்ணிய அமுதா சோக கண்ணீரும் ஆனந்த கண்ணீரும் ஒன்றாக வார்த்தாள். அதிகநேரம் அவன் மடியிலேயே சாய்ந்து கிடந்தாள் . மற்றவர்களின் வாய் ஆறுதல்களை விட , அது அவளை வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திருப்பியது . கணவனின் ஸ்பரிசத்தை அன்று தான் மனதளவில் உணர்ந்தாள் அவள் ....
இவர்களின் இதயங்களை இணைத்துவிட்டு , உறவுக்கு உயிர் கொடுத்துச்சென்ற அந்த கருவிற்கு இதயம் இல்லை என்று சொல்கிறது மருத்துவம் !

"கூளச்சி""

மனதில் ஊனம் வைத்த சிலர்
நாவில் விஷம் வைத்து
என்னை சீருகயிலும்
சூரியனிடம் குலைக்கும்
நாயை நினைத்து
சிரித்திருந்தேன் நான்

என் மனதில் வைத்த சிலர்
வேடிக்கையின் வாடிக்கையில்
என்னை " கூளச்சி "
என்று சீண்டுகையில்
ஏனோ நான் வெளியே சிரித்தாலும்
செல்லமாய் அடிப்பதாய் நடித்தாலும்
இயற்கையின் ஓரவஞ்சனையை எண்ணி
உடைந்துபோகிறது
என் மனம் மட்டும் அல்ல நம்பிக்கையும் !!

எழுதா கதை !

சொல்லாத காதலை சொல்ல துடிக்கும் காதலி
காதலனிடம் சொல்ல போகிறாள் !

சொல்லிவிட்டேன் உன் காதலை அந்த பெண்ணிடம்
நம்பிக்கையோடு காத்திரு என்று !!

எனக்குள் நானே !!



எது தனிமை ,

யாரும் அருகில் இல்லாமல் இருப்பதா?

பேச ஆள் இல்லாமல் இருப்பதா ?

என்னை சுற்றி ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்களே !

எவ்வளவோ பேசுகிறேனே !!

இருந்தும் ஏன் இந்த வெறுமை இந்த மனதில்!!

பேசும் வார்த்தைகள் எல்லாம் உதட்டில் ஜனனம் கொள்ள

உள்ளத்தில் கருத்தரித்த வார்த்தைகள் ஏனோ இன்னும் பிரச்சவிக்காமல் !!

மனமும் ஒரு கடலாய்

எண்ணங்கள் கொந்தளித்தாலும்

ஆழ் மனதில் ஒரு அமைதி

வெறுமையின் துன்பத்திலும்

எதோ இன்பம் .


யாரும் இல்லாத நேரத்தில்

தேடுகிறேன் நான் என்னை !

பேசுகிறேன் என்னோடு

அறிகிறேன் என் மனதை !!


உன்னோடு நானும்

என் மனதின் பாதி இடத்தில் நீ வீற்றிருந்தாய்
எனக்கான என் மனதின் மீதி இடம் முழுவதும் உனக்கான கனவுகள்
தினமும் ஒரு முறை உன் மின் அஞ்சலில்
உன் பழைய வாழ்த்துக்கள் உயிர் பெற்றன
குறுந்தகவல்களும் , தொலைத்த அழைப்புகளும்
உன்மீதான என் அன்பை காட்ட துடித்துக்கொண்டிருந்தன
தட்டச்சியுடன் போட்டி போட்டுக்கொண்டு என் இதழ்கள் உன்னோடு பேசின
இவை அனைத்தின் மிகையான சத்தத்தினாலோ
என்னவோ என் இதயத்தின் துடிப்பை நீ கேட்கவில்லை
இன்று நான் அமைதி காக்கிறேன்
பொங்கி வரும் உணர்ச்சிகளுக்கு தடை விதிக்கிறேன்
இடைவெளி எல்லாம் தாண்டி உன்
காதுக்கு என் இதய ஓசை எட்டும் என்ற நம்பிக்கை உடன்
என் மனம் முழுவதிலும் நீ வீற்றிருக்கிறாய்

ஹி ஹி ஹி ஹி



சுதந்திர தேவி யின் அருகில்

ஜாமீன் இல் வெளியாகிய நான் !!

எங்கேயோ ஒரு குரல்

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்
உன் முன் இருப்பது என்னமோ உன் பிம்பம் தான்
சுக்கு நூறாய் நீ உடைத்தாலும்
உடைவது என்னமோ உன் நிழல்கள் தான் !

உனக்குள் நீ எவ்வளவு கத்தினாலும்
உன் இதயம் என்னும் ஒலி கவச அறையை விட்டு
அது வெளியேற போவது இலலை !

கனவில் நீ வடித்து வைத்த பாத்திரங்கள் எதுவும்
உன் நினைவில் வசனங்களை ஒப்புவிக்க போவதும் இல்லை !

உலக நாடக மேடையில் அரங்கேற்ற துடிக்கும் உன் நிஜம் !!

இடை வெளி துளிகள்

சண்டைகளில் தேடிய இடை வெளி
அருகில் தொலைத்த என் சந்தோசங்கள்
தூரத்தில் கிடைக்கும் என்று நினைத்த அமைதி
எல்லாம் கிடைத்தது !
தூரத்தின் அமைதியில் .. தொலைந்து போன நம் அன்பு
கட்டி வைத்து காத்திருக்கிறேன் ,
மறுபடியும் உன்னோடு போர் நடத்த.. !!

இடை வெளியை உம் ரசிக்கிறேன் இன்று
நம்முள் வலியை உணர்த்தியதால்



சண்டைகள் கூட அருகில் இருந்தால் தான் இனிக்கும்
சுகங்கள் கூட தூரத்தில் இருந்தால் கசககும்


நினைவுகள் கூட
இத்தனை சுகம் தரும்
என்று கண்டதில்லை நான்
பிரிவிலும் அருகில் சேர்க்கும்
இந்த நினைவுகளை ச்பரிசுக்கும் வரை !!

ஆசை ஆசை

ஞயாயிற்று கிழமையும் அதுவுமா இந்த முறையானு வீட்ல இருக்கனும் னு நெனச்சோம் . அது க்கு சதி செய்தார் போல என் கணவரின் கைபேசி சிணுங்கியது , "வாழ்த்துக்கள் சார், புத்தக கண்காட்சியில் நீங்கள் போட்ட சீட்டில் உங்களுக்கு குலுக்களில் இரண்டு பரிசு விழுந்திருக்கு ,ஆறு மணிக்கு இந்த விலாசத்துக்கு வந்து வாங்கிட்டு போங்க " னு சொன்னது அந்த குரல். ஆசை யார விட்டுச்சு "இரண்டு பரிசாமே , என்னவா இருக்கும் ? " னு ஒரு குரல் .. " எங்க வீட்ல யாருக்கும் பரிசு விழுந்தது இல்ல , இப்போ தான் இப்படி விழுந்திருக்கு " னு ஒரு குரல் , "எல்லாம் மறுமக வந்த நேரம் " னு ஒரு குரல் . இத எல்லாம் கேட்டு நான் பெருமிதம் வழிய நின்று கொண்டிருந்தேன் . ஷாப்பிங் கூட இதற்காக சீக்கிரம் முடித்து ( பாதியிலேயே ) கொண்டு , அவர்கள் சொன்ன விலாசத்திற்கு கிளம்பினோம் . காரணம் அவர்களிடம் இருந்து வந்த இரண்டு தொலைபேசி அழைப்புதான் . "இத்தனை முறை கூபபிடுகிறார்களே பெரிய்ய பரிசு தான் போலும் " என்ற எண்ணம் எல்லோர் மனதிலும். நாங்கள் வரும் நேரத்தையும் கூட குறிப்பிட்டு கொண்டார்கள்.எல்லாம் ஒரே மாயயாக இருந்தது (அங்கு செல்லும் வரை தாங்க ! போனதும் எல்லாம் விளங்கிடுச்சு ).

சுற்றுலாகளுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தரும் நிறுவனம் அது என்று தெரிந்தது . போனதும் ஒருவர் வந்து பயங்கரமாக வரவேற்று , பெயர் எல்லாம் குறித்துக்கொண்டார் , ஆறு மணி முதல் எட்டு மணி வரை உங்களுக்கு எங்கள் ஊழியர் ஒருவர் எங்கள் நிறுவனத்தை பற்றி விவரிப்பார் னு சொன்னார். அடிங்க ரெண்டு மணி நேரம் பேச போறாங்களா னு தெரிஞ்சதுமே கண்ண கட்டிருச்சு , "வந்துடோமே என்ன பண்றது போய தொலையலாம் , கடைசி வரைக்கும் படுத்தாம இவங்க விட மாட்டாங்க "னு தெரிஞ்சு போச்சி , மனச திட படுத்திகிட்டு உள்ள போனோம் .

உள்ள போனதும் , " உங்களுக்கு 25000 மதிப்புள்ள பரிசு கெடைச்சிருக்கு வாழ்த்துக்கள் " னு அவர் சொன்னபோது வாய திறந்தவங்க தான்.. அப்டியே அவர் பேசறத காதுல மட்டும் கேட்க ஆரம்பிச்சோம்.. அவர் " இப்போ எங்க இன்னொரு ஊழியர் உங்ககிட்ட விரிவா பேசுவாங்க " னு சொன்னார் . இன்னொரு பெண்மணி சிரிச்சிகிட்டே வந்தாங்க (என்ன பேஸ்ட் போடறாங்களோ )எங்க குடும்பத்தோட ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் கேட்டாங்க... எதோ கணவன் மனைவி பேட்டி எடுக்கராப்புல , "இத உங்க மனைவி ட தான் கேட்கணும் அத உங்க கணவர் ட தான் கேட்கணும் " , இப்படி மாத்தி மாத்தி ஜோக் அடிச்சு அவங்க மட்டும் சிரிச்சாங்க, தலை விதி . நான் அப்போவே கடிகாரம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன் .. இப்படி ஒண்ணு ஒண்ணா கேட்டு கேட்டு எதேதேதோ குறிச்சி கிட்டாங்க , அப்றோம் வந்திச்சு வேட்டு , அவங்க திட்டத்த பத்தியும் , அதன் பலன்களை பத்தியும் சொல்ல ஆரம்பிச்சாங்க ஹா ( ஒண்ணும் இல்ல நாங்க கொட்டாவி விட்ட சத்தம் தான் அது ) . ஆத்தி பயங்கரமான ஆளுங்க டோய் " இந்த குலுக்கல் ல ஜெயிச்சவங்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை , அதுவும் இன்றைக்கு மட்டும் தான் இந்த சலுகை " னு சொல்லி சும்மா அசால்டா 250000 கட்ட சொல்லிட்டாங்க.. பப்பர பே னு ஆயிடுச்சு எங்களுக்கு ... முடியாது னு சொன்னதுகப்ரமும் விடலே அவங்க.. தவணை திட்டம் அது இது னு சொல்ல ஆரம்சாங்க .. எதுக்கும் மசியல னு தும் 35000 துக்கு ஒரு திட்டம் அதுல யானு சேருங்க வாழ்நாள் முழுதும் உங்களுக்கு ஊர் சுற்றி காட்றோம் னு சொன்னாங்க . ஒரு ரூபா வரைக்கும் திட்டம் வச்சிர்பாங்க போல! எப்படியோ "நாங்க ஊரே சுத்தி பார்க்க மாட்டோம் " னு சொல்லி அங்க இருந்து வர்றதுக்குள்ள .. போதும் போதும் னு அய்டிச்சு. எங்க மன ஆறுதல் வேண்டி ஒரு குக் வேர் கொடுத்தாங்க . அப்றோம் அந்த 25000 மதிப்புள்ள சுற்றுலா தங்கும் வசதி கான கூப்பன் கொடுத்தாங்க , அப்றோம் தான் தெரிஞ்சது இடம் தான் இலவசம் மத்த படி போறது க்கு வர்றது க்கு , சாப்பாடு க்கு எல்லாம் நம்ம ஒரு 50000 செலவு பண்ணனும் னு .

மண்டைல அடிச்சாப்ல அப்போ தாங்க ஏறிச்சு .. இலவசமா வருதுன்னு எதுக்கும் ஆச படக்கூடாது னு . ஆதாயம் இல்லாமல் யாரும் எதையும் செய்ய மாட்டாங்க னு . தொடர்ந்து அப்பா வின் தொலைபேசி அழைப்பு வந்தது , இதெல்லாம் சொன்னதும் " உன்னுடைய உழைப்பு இல்லாமல் , இலவசமாய் வரும் எதற்கும் நீ ஆசை படாதே கண்ணு " னு சொன்னார். எவ்ளோ உண்மையது ங்கறது புரிஞ்சது.

மயிரிழையில் வலையில் இருந்து தப்பினோம் னு வந்தாச்சு , தீமையிலும் நன்மையா ஒரு நல்ல பாடம் படிச்சாச்சு . ஆனாலும் அந்த நிறுவனம் மக்களை கவர் வதற்காக மேற்கொண்ட யுத்திகளுக்கு ஒரு ஜே போட்டே ஆகணும் .உங்களை அதிர்ஷ்ட சாளியாகவும் , இன்று முடிவு எடுக்கா விடில் உங்களுக்கு பெரிய இழப்பு நேரிடும் என்றும் நம்ப வைத்து பணம் பார்க்கும் இப்படி பட்ட திட்டங்கள், உணமையான திட்டங்களோ இல்லை ஏமாற்றும் என்னமோ ஒரு நாளில் முடிவெடுத்து அவ்வளவு பெரிய தொகைக்கு குறி வைக்கும் எந்த நிறுவனத்தையும் நம்ப கூடாதுங்க ,, என்ன சொல்றிங்க ?

குறுந்தகவல்

நீ
"சீ போ"
என்று குறுந்தகவல் அனுப்பினாய் !
அதை எப்படி எல்லாம் சொல்லி இருப்பாய்
என்ற வசன ஒத்திகையில்
நான் !!

TAGGING

Tagging is fun. I enjoy doing it as long as it is as meaningless as the current one...
I was tagged by Bala...

All you're needed to do is to add your name to the end of the list.

The rules are that
You shouldn't use any colors
You should add only a short description
You shouldn't change anything else in the tags.
And there's also a way out where you can let others know that you're not interested in this crap by saying 'No' :-)

Here goes1.-Filipina,2.-Stories,3.-Abroad,4.-Husband,5.Gagiers, 6. Life 7. Everything, 8. Offer, 9. Moments, 10. Food Trip 11. World 12. suffering 13.china's autograph 14.Kiran's My voice15. Boobu 16.Sugar & Spice 17. ~*Girl of Destiny*~ 18. Goofy 19 SONA-DROPS OF HONEY


i am now passing on this to senthil

காத்திருக்கிறேன்

என் சோகங்கள் உன்னோடு பகிர்ந்திடாமலே
உன் சிரிப்பில் புதைந்து போகின
உன்னிடம் சொல்லவேண்டிதான்
என் சுகங்கள் எல்லாம் உன் முகம் தேடின
உன் ஆதரவான பார்வையிலேயே
என் நெஞ்சில் நம்பிக்கை பூக்கள் பூத்தன
உன் வருகையை எதிர்பர்ர்த்தே
என் கண்கள் வாசலை நோக்கின
உன் லட்சியம் நோக்கி பறந்தாய்
என் மனம் சுகம் துக்கம் இரண்டின் கலவையாய்
தூரம் என்பது பிரிவை ஏற்படுத்துவது இல்லை நட்பில்
இருப்பினும் எதோ ஒரு வெற்றிடம் என் மனதின் ஓரத்தில்
மின் அஞ்சலுக்கும் கைபேசி வடிகட்டும் ஒலி அலைகளுக்கும்
புரியாத உணர்வுகள்
சொல்லாத என் சோகங்கள்
சொல்லதுடிக்கும் என் சந்தோஷங்கள்
எல்லாம் தேங்கி நிற்கின்றது என் விழி ஓரங்களில்
உன்னோடு மௌனத்தை பரிமாறும் நொடிக்காக !!