உன்னில் தடவியதும் பெற்ற நல்லெண்ணையின் புது வாடை
உன்னில் பரவியதும் புத்துணர்ச்சி பெற்றிட்ட புத்தாடை
பூவாணம் தூவுகையில் மலர்ந்திட்ட உன்முகம்
ஒளிர்மலர் கரங்கள் கண்டு தட்டிய உன் கரம்
மத்தாப்பு இதழ் உதிர்கையில் மலர்ந்திட்ட உன் முகம்
சரவெடி சப்த்தத்தில் என் மார்போடு தழுவிய உன் ஸ்பரிசம்
பம்பரமாய் சுற்றிய சங்குசக்கரம்
கையில் அள்ளிட துடித்திட்ட உன் துணிகரம்
மாசு மண்டலம் நிறைந்து மூச்சுமுட்டிய நேரத்திலும்
புகைமண்டலம் நடுவே நீ தந்திட்ட சொர்க்கம்
கண்ணே உன்னோடு பல தீபாவளி பார்த்திட ஆசை தான்
அதுவரை பூமி பந்து தாங்கி நிற்குமா இந்த கொடுமையை
என்று உணர்வோம் தனக்கே குளிபரித்துகொள்ளும் இந்த மடமையை
என்று உணர்வோம் பூமி தாய்க்கு செய்ய வேண்டிய நம் கடமையை
செய்ய வேண்டும் மனதின் நிசப்தம் வெல்லும் ஒரு சரவெடியை
செய்ய வேண்டும் உள்ளத்தின் இருள் போக்கும் ஒரு மத்தாப்பை
செய்ய வேண்டும் அன்பென பொழியும் ஒரு பூவானத்தை
செய்ய வேண்டும் மடமைகளை அறுத்தெறியும் ஒரு சங்கு சக்கரத்தை
கண்ணே உடனே செய்ய வேண்டும் இந்த ஆயுதத்தை
தேவை படும் உணர்ந்துகொள் உன் எட்டாம் அறிவை!!
லாலி லாலி
லாலி லாலி செல்லமே லாலி
லாலி லாலி என் கண்ணே லாலி
தூரியில் போட்டு ஆட்டுவேன் லாலி
ஆட்டி நானும் பாடுவேன் லாலி
நான் பாட நீயும் தூங்கிடு லாலி
தூங்கிட மெல்ல கண் மூடு லாலி
உன் தாய் நானும் உன்னுடன் இருப்பேன்
உனையேதும் தீண்டாது காவல் நான் காப்பேன்
கண்ணே நானிருக்க கலக்கம்தான் ஏனோ
அமுதே நானிருக்க அமைதியாய் தூங்கு
பூமிக்கு வந்த சூரியன் நீயோ
என்மடி பூத்த தாமரை தானோ
பிஞ்சு நிலவோ நீ கொஞ்சு புறாவோ
செல்ல கிளியோ இல்லை சங்க தமிழோ
லாலி லாலி என் கண்ணே லாலி
தூரியில் போட்டு ஆட்டுவேன் லாலி
ஆட்டி நானும் பாடுவேன் லாலி
நான் பாட நீயும் தூங்கிடு லாலி
தூங்கிட மெல்ல கண் மூடு லாலி
உன் தாய் நானும் உன்னுடன் இருப்பேன்
உனையேதும் தீண்டாது காவல் நான் காப்பேன்
கண்ணே நானிருக்க கலக்கம்தான் ஏனோ
அமுதே நானிருக்க அமைதியாய் தூங்கு
பூமிக்கு வந்த சூரியன் நீயோ
என்மடி பூத்த தாமரை தானோ
பிஞ்சு நிலவோ நீ கொஞ்சு புறாவோ
செல்ல கிளியோ இல்லை சங்க தமிழோ
Labels:
lullaby
ஆராரோ ஆரிரரோ பாடட்டுமா !
எனக்குள் வந்த மாற்றமே
அழகான இடை ஏற்றமே
என்னை நானே ரசிக்கின்றேன்
என்னுள் நீ வசிப்பதினால்
என்னில் கனவுகள் தருகிறாய்
இயற்கையான அதிசயமாய் விரிகிறாய்
ரணங்களெல்லாம் மறந்து போக
பூரண நிவாரணியாய் வருகிறாய்
பார்க்காமலே காதல் புரிதலில்
காதல் உணர்தலில் காதல்
எல்லா வகையிலும் உன்னை
காதலிக்க வைத்தாய் நீ
தண்ணீர் குடத்தில் ஜனிக்கும்
முத்தே என் முழுமதியே
கண்ணீர் துடைக்க வந்த
கண்ணே என் களஞ்சியமே
என் வாழ்வின் வசந்தமே
என்னை வருடிச்செல்லும் தென்றலே
உன் அசைவிலே அசரவைக்கிறாய்
உதைத்தே உற்சாகம் ஊட்டுகிறாய்
நான்கு கண்கள் காணும்
ஒற்றை கனவு நீ
இரண்டு உயிர்கள் சுமக்கும்
ஒற்றை ஜீவன் நீ
உன்னை ஏந்தும் நொடிக்காக
கையேந்தி காத்திருக்கிறேன் நான்
உனக்கு புகட்ட வேண்டியே
அன்பு சுரந்து வீற்றிருக்கிறேன்
நினைத்ததை முடிக்கும் விநயனா
நினைத்ததும் சிலிர்க்கும் தென்றலா
புதிரின் முடிச்சு அவிலட்டும்
புன்னகை பூ மலரட்டும்
அழகான இடை ஏற்றமே
என்னை நானே ரசிக்கின்றேன்
என்னுள் நீ வசிப்பதினால்
என்னில் கனவுகள் தருகிறாய்
இயற்கையான அதிசயமாய் விரிகிறாய்
ரணங்களெல்லாம் மறந்து போக
பூரண நிவாரணியாய் வருகிறாய்
பார்க்காமலே காதல் புரிதலில்
காதல் உணர்தலில் காதல்
எல்லா வகையிலும் உன்னை
காதலிக்க வைத்தாய் நீ
தண்ணீர் குடத்தில் ஜனிக்கும்
முத்தே என் முழுமதியே
கண்ணீர் துடைக்க வந்த
கண்ணே என் களஞ்சியமே
என் வாழ்வின் வசந்தமே
என்னை வருடிச்செல்லும் தென்றலே
உன் அசைவிலே அசரவைக்கிறாய்
உதைத்தே உற்சாகம் ஊட்டுகிறாய்
நான்கு கண்கள் காணும்
ஒற்றை கனவு நீ
இரண்டு உயிர்கள் சுமக்கும்
ஒற்றை ஜீவன் நீ
உன்னை ஏந்தும் நொடிக்காக
கையேந்தி காத்திருக்கிறேன் நான்
உனக்கு புகட்ட வேண்டியே
அன்பு சுரந்து வீற்றிருக்கிறேன்
நினைத்ததை முடிக்கும் விநயனா
நினைத்ததும் சிலிர்க்கும் தென்றலா
புதிரின் முடிச்சு அவிலட்டும்
புன்னகை பூ மலரட்டும்
நான்காம் பிறந்தநாள் காணும் என் இனிய நட்பே !
நொடி பொழுதாய் கடந்துவந்த நான்கு வருடம்
திரும்பி பார்க்கிறேன் ,
எத்தனை இன்பங்கள் , துன்பங்கள்
ஒன்றாய் கூடி அடித்த கும்மாளங்கள்
தனியாய் தவித்திருந்த தருணங்கள்
காதலாய் மாறிய நட்பு
நட்புக்குள்ளும் மறைத்த காதல்
சின்ன சின்ன சண்டைகள்
பெரிய பெரிய மொக்கைகள்
கூடி எடுத்துக்கொண்ட படங்கள்
தனியாய் கற்றுக்கொண்ட பாடங்கள்
என்றும் மறக்காத காலச்சுவடுகள்
வாழ்க்கை ஒட்டத்தில் சற்று இளைப்பாற
ஓர் மரத்தில் கூடிய பறவைகள் நாம்
சிலர் உயரம் காண பறந்தோம்
சிலர் உயரம் இதுவே என இருந்தோம்
சிலர் விதியின் முடிவெதுவோ என பிரிந்தோம்
நிரந்திரம் இல்லை நிரந்திரம் என உணர்ந்தோம்
நம் கால்களின் வேர்கள் எங்கே முளைதிட்டாலும்
தங்கிஇருந்த மரத்தை மறவாமல் இருப்போம்!!
காயங்கள் மறந்து போகும்
ஞாபகங்கள் முந்திச்செல்லும்
பார்க்காமல் போனாலும்
பேசாமல் இருந்தாலும்
நட்பு மட்டுமே நீண்டு வாழும் !!
- இது என் வாழ்க்கையில வந்த வசந்த காலம் !!
இது என் நண்பர்களுக்கு அர்ப்பணம் !!
திரும்பி பார்க்கிறேன் ,
எத்தனை இன்பங்கள் , துன்பங்கள்
ஒன்றாய் கூடி அடித்த கும்மாளங்கள்
தனியாய் தவித்திருந்த தருணங்கள்
காதலாய் மாறிய நட்பு
நட்புக்குள்ளும் மறைத்த காதல்
சின்ன சின்ன சண்டைகள்
பெரிய பெரிய மொக்கைகள்
கூடி எடுத்துக்கொண்ட படங்கள்
தனியாய் கற்றுக்கொண்ட பாடங்கள்
என்றும் மறக்காத காலச்சுவடுகள்
வாழ்க்கை ஒட்டத்தில் சற்று இளைப்பாற
ஓர் மரத்தில் கூடிய பறவைகள் நாம்
சிலர் உயரம் காண பறந்தோம்
சிலர் உயரம் இதுவே என இருந்தோம்
சிலர் விதியின் முடிவெதுவோ என பிரிந்தோம்
நிரந்திரம் இல்லை நிரந்திரம் என உணர்ந்தோம்
நம் கால்களின் வேர்கள் எங்கே முளைதிட்டாலும்
தங்கிஇருந்த மரத்தை மறவாமல் இருப்போம்!!
காயங்கள் மறந்து போகும்
ஞாபகங்கள் முந்திச்செல்லும்
பார்க்காமல் போனாலும்
பேசாமல் இருந்தாலும்
நட்பு மட்டுமே நீண்டு வாழும் !!
- இது என் வாழ்க்கையில வந்த வசந்த காலம் !!
இது என் நண்பர்களுக்கு அர்ப்பணம் !!
Labels:
நட்பு
காதல் நடக்குது !!

தொலைவை எல்லாம் நொடியில்
தொலைத்து விட்டு
நீயும் நானும் நடக்க
பேசிய வார்த்தைகளை விட
நம்மிடம் இருந்த
மௌனம் கணக்க
பிரியும் நேரம் வருகையில்
இருவரின் கால்களும்
அன்ன நடை கற்பிக்க
சொல்லாத நம் காதல்
அடி நாக்கின்
கற்கண்டாய் இனிக்க
Subscribe to:
Posts (Atom)
