இதயம்

மருத்துவரை சந்தித்து விட்டு வந்த அமுதாவின் கண்கள் குளமாகி போயின .சாலையில் கணவன் கையை கோர்த்துக்கொண்டு நடப்பதையே விரும்பாதவள் , அந்த மருத்துவமனையின் மிகுந்த கூட்டத்தின் நடுவில் , அவள் கணவன் பாஸ்கரனை கட்டிக்கொண்டு அழுதாள் . இத்தனை நெருக்கமும் அன்யோன்யமும் அவர்களுக்குள் வந்தது எப்படி ?
திருமணத்தின் மீது பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை அமுதாவிற்கு , அவளதுவேலையில் இருக்கும் சுவாரசியமும் ,ஈர்ப்பும் ஏனோ அவள் திருமண வாழ்கையில் இருப்பதாக உணர்ந்ததே இல்லை . கடமையாக மட்டுமே நினைத்த அவள் இல்வாழ்க்கையில் காதலுக்கு இடமே இருந்தது இல்லை . அவள் வளர்ந்த சூழலிற்கு முற்றிலும் மாறுபட்ட அவள் புகுந்த வீடு , அங்கு கிடைக்காத சிந்தனை சுதந்திரம் , பிடிக்காதவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் , எல்லா விஷயங்களிலும் பாஸ்கரனுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு , ஆசைகளுக்கெல்லாம் ஏற்பட்ட தடை எல்லாமும் அவள் திருமண வாழ்க்கையில்கசப்பை கூட்டிக்கொண்டே போயின.என்றும் அவள் எண்ணத்தில் இழந்து விட்ட அவள் சுதந்திரத்தின் சோக கீதம் தான் .. இப்படித்தான் மெதுவாய் கடந்தது ஒன்றரை வருடம் .
பாலைவனமான அவள் மனதில் பூத்தது ஒரு சந்தோசப்பூ . அவள் கர்ப்பமானதைஉறுதிப்படுத்திய அந்த நொடி , அவள் மனதுக்குள் புது உற்சாகத்தை தந்தது . பல கோடி மத்தாப்புகள் ஒன்றாய் சிரிப்பது போல் அவள் மகிழ்ந்தாள் . தனக்காகவென்றே ஒரு ஜீவன் அந்த வீட்டுக்குள் வரப்போவதை நினைதுநினைத்து பூரித்து போனாள் .அவள் வீட்டின் வானிலையே மாறிவிட்டது . அவளுக்காகவே அவள் குடும்பம் சுழன்றது . எந்நேரமும் அவளை குற்றவாளி கூண்டில் ஏற்றும் பாஸ்கரன் , அவளுக்காக பரிந்து பேசினான். பழங்களை வாங்கி குவித்தான் . அவன் கண்களிலும் அவள் கனவுகளை கண்டான் . ஒன்றாய் பல திட்டங்களை தீட்டினார்கள் . வேறுபாடில்லாத கருத்துகளை பரிமாறிக்கொண்டனர் .இல்லற வாழ்வின் சாராம்சத்தை உணர்ந்தாள் . அலுவலகத்தை விட வீடு அவளை ஈர்க்கத்தொடங்கியது . வீட்டிலேயே அதிக நேரம் களித்து மகிழ்ந்தாள் . அவள் இல்லறத்திலும் இத்தனை இன்பங்களா என்று சிலிர்த்தாள் . ஆனால் நிலைக்கவில்லை அவள் நினைப்பு .
சில நாட்களாய் தனக்கு ஏற்படும் உபாதையை பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க சென்றாள். ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர் சொன்ன பதில் அவளுக்குள் இடியாக இறங்கியது . கருவின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவும் , கருவிற்கு இதயம்உருவாகவே இல்லை என்றும் , இதய துடிப்பில்லாத அந்த கருவை கலைத்து விடுவது தான் அமுதாவிற்கு நல்லது என்று சொன்னார். கருவை கலைப்பது தான்அவளுக்கு நல்லதா ? அவள் வாழ்க்கையின் கருவையே அவளுக்கு உணர்த்திய அவள கண்மணியை கலைக்க வேண்டுமா ?? ஆயிரம் கேள்விகள் மின்னலாய் பாய்ந்தது .
மருத்துவரை சந்தித்து விட்டு வந்த அமுதாவின் கண்கள் குளமாகி போயின .பல ஆயிரங்கலாய் உடைந்து போனாள் அமுதா . அந்த மருத்துவமனையின் மிகுந்த கூட்டத்தின் நடுவில் பாஸ்கரனை கட்டிக்கொண்டு அழுதாள் . பாஸ்கரன் செய்வதறியாது தவித்தான். வேறு சில மருத்துவர்களிடம் அவளை அழைத்துசென்றான் . சொல்லிவைத்தார் போல் எல்லா மருத்துவர்களும் அதையேசொல்ல, முடிவை எண்ணி முடிவில்லா சோகத்தில் மூழ்கினாள் அமுதா . வானில் பறந்திருந்தவள் அகள பாதாளத்தில் ஒடுங்கியது போல் உணர்ந்தாள் .
அமுதாவின் தாய் வீட்டிற்கு போகவேண்டும் என்றாலே கடிந்து கொள்ளும் பாஸ்கரன், அமுதாவின் மனநிலை உணர்ந்து அவளை அங்கு அழைத்துச்சென்றான் . கருகலைப்பு நடந்து இரண்டு நாட்களுக்கு அவள் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டான் . யாரும் அவள் மனதை காய படுத்திவிட கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தான் . சொந்தங்களின் துக்க விசாரிப்புகள் அவளை நெருங்காது பார்த்துக்கொண்டான் .
இத்தனை இனியவனா அவள் கணவன் என்றெண்ணிய அமுதா சோக கண்ணீரும் ஆனந்த கண்ணீரும் ஒன்றாக வார்த்தாள். அதிகநேரம் அவன் மடியிலேயே சாய்ந்து கிடந்தாள் . மற்றவர்களின் வாய் ஆறுதல்களை விட , அது அவளை வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திருப்பியது . கணவனின் ஸ்பரிசத்தை அன்று தான் மனதளவில் உணர்ந்தாள் அவள் ....
இவர்களின் இதயங்களை இணைத்துவிட்டு , உறவுக்கு உயிர் கொடுத்துச்சென்ற அந்த கருவிற்கு இதயம் இல்லை என்று சொல்கிறது மருத்துவம் !

9 comments:

JK said...

நல்ல உணர்ச்சி மிக்க கதை( உண்மை போல் உள்ளது)

butterfly Surya said...

நடையும் எழுத்தும் நல்லாயிருக்கு.

தேன் என்ற பேரை பார்த்ததும் பறந்து வந்தேன்..

வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya.blogspot.com

butterfly Surya said...

தங்கள் வருகைக்கு நன்றி..

சென்னையில் international film festival வரும் டிசம்பர் 17 முதல் 27வரை.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்

10 நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூ500/- மட்டுமே..

தேன்மொழி said...

நன்றி ஜெ கே
இது உண்மை பாதி கற்பனை பாதி கலந்து செய்த கதை :-)

வண்ணத்து பூச்சியாரே உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி
பறந்து வந்த உங்களை என் கதை ஏமாற்றிவிடவில்லை என்பதில் மகிழ்ச்சி

butterfly Surya said...

தேன். இன்று வந்த ஏமாற்றாம் தான்.

மாசம் ஒரு கதை தானோ..??

நிறைய எழுதவும்

Anonymous said...

Excellent...
chance ila
unmayana nigalvu ovoru veetilum....
veetin vanilaye mariyathu... enna lines...

Thenmozhi romba nalla irundhudhu..
This is the first blog of yours am reading.......

Anonymous said...

Once again you created an impact Thenmozhi.. Keep writing..

Wishing you Success!!

Anonymous said...

idhu kadai alla, nijam endru nanraaga therigiradhu.

tamizh said...

kadhainu nenachu paarata thonala.. nijamnu nenachu azhadhan thonudhu :)

Anyway, excellent!! no words to express the feel of this writeup..

Hello anonymous, "kadhai alla nijamnu" edhuku anonymousa vandhu solreenga... nijatha solravanga yarum ipadi perilama olinjika maatanga...