காத்திருக்கிறேன்

என் சோகங்கள் உன்னோடு பகிர்ந்திடாமலே
உன் சிரிப்பில் புதைந்து போகின
உன்னிடம் சொல்லவேண்டிதான்
என் சுகங்கள் எல்லாம் உன் முகம் தேடின
உன் ஆதரவான பார்வையிலேயே
என் நெஞ்சில் நம்பிக்கை பூக்கள் பூத்தன
உன் வருகையை எதிர்பர்ர்த்தே
என் கண்கள் வாசலை நோக்கின
உன் லட்சியம் நோக்கி பறந்தாய்
என் மனம் சுகம் துக்கம் இரண்டின் கலவையாய்
தூரம் என்பது பிரிவை ஏற்படுத்துவது இல்லை நட்பில்
இருப்பினும் எதோ ஒரு வெற்றிடம் என் மனதின் ஓரத்தில்
மின் அஞ்சலுக்கும் கைபேசி வடிகட்டும் ஒலி அலைகளுக்கும்
புரியாத உணர்வுகள்
சொல்லாத என் சோகங்கள்
சொல்லதுடிக்கும் என் சந்தோஷங்கள்
எல்லாம் தேங்கி நிற்கின்றது என் விழி ஓரங்களில்
உன்னோடு மௌனத்தை பரிமாறும் நொடிக்காக !!

4 comments:

Girl of Destiny said...

such deep feelings! lovely.

தேன்மொழி said...

after a long time i was induced to write blog d.. it was a surprise tht you checked my blog ..

thanks for the comment da :-)

Nivi said...

I read it four times.. enjoyed reading every single line..

மின் அஞ்சலுக்கும் கைபேசி வடிகட்டும் ஒலி அலைகளுக்கும்
புரியாத உணர்வுகள்

awesome...!!!

tamizh said...

:) Kavidhaila kalakra sona.... super!