Showing posts with label verse. Show all posts
Showing posts with label verse. Show all posts

கண்ணா! நீ தவறு செய் !!

நீ தவறு செய்யும் போதெல்லாம்
உன்னை பற்றி அதிகம் யோசிக்கின்றேன்!
புயலென நான் உன்னை கண்டிக்கும்போது
என்னை தென்றலாய் வருடும்
உன் கண்ணோர குறுஞ்சிரிப்பு
அதை மிகவும் இரசிக்கின்றேன்!
ஆதலால் கண்ணா நீ தவறு செய் !!

மனம் ஒரு மஹாபாராதம் !

முதலில் தடம்புரண்டாலும் இறுதியில் தர்மத்தின் வழியில் செலுத்தும் மனம்

நட்பிற்க்காக உயிரையும் துறக்க துணியும் மனம்

கேட்பாற்க்கு இல்லை என்று சொல்லாத ஈகை குணமிக்க மனம்

பொருளுக்கும் பதவிக்கும் ஆசை படும் மனம்

சுட்டெரிக்கும் தீ என்று தெரியாமல் பொறாமை கனலில் வேகும் மனம்

காய்களை நகர்த்தி குறுக்கு வழியில் சாதிக்க முயலும் மனம்

நியாயத்திற்காக போராடும் மனம்

எல்லா குணங்களின் குவியலாய் இந்த
மனம் ஒரு மஹாபாராதம் !