உன் முகம் அறிந்தும் அறியாமல்
உன் அகம் புரிந்தும் புரியாமல்
 என் நிலை தெரிந்தும் தெரியாமல்
தன்னிலை மறந்தும் மறவாமல்
காந்தம் ஈர்த்த இரும்பாய்
கள்ளில் விழுந்த வண்டாய்
உன் குரல் கேட்ட பொழுதில்
என் மனம் வீழ்ந்திட்ட நொடியில்
மூழ்குபவனின் மூச்சுக்காற்றாய்
உறைந்தவன் ஏங்கிய அனலாய்
 கிடைத்திட்டாய் நீ எனக்கு!!

குழந்தை கையில் பொம்மை நீ
எடுத்தெரிந்தாலும் நீ வேண்டும்
 அது அணைத்துரங்கிட

விடியாதொரு இரவினில்
காணாதொரு கனவினில்
உன் குரல் ஒலி வழியில்
மதி மயங்கி செல்கின்றேன்
தோழன் தோள் சாயந்து துயில் கொள்ள
மீளாதொரு உறக்கம்....

No comments: